Friday, February 12, 2016

கண்ணன் - கிரேசி மோகன்


''அன்னை புரியும் அலங்காரம் பார்த்து
 என்னதான் அப்படி யோசனை! -கண்ணனே!,
’’ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா’’?
 ஆதலினால் தானே அலுப்பு! ‘’....


  அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
  கம்மென நிற்பதன் காரணம் -நம்மனம்,
  புத்தியை, மாற்றிடும் யுக்தியாம் கீதையை
  ஒத்திகை பார்ப்பதற்க் கோ !’’.


வருடம், மாதம், தேதி, நினைவில்லை.... சு.ர இந்த ‘’யசோதா கண்ணனுக்கு அலங்காரம்’’ செய்யும்  ஓவியத்தை மெயிலில் அனுப்பியபோது அடியேன் பார்த்த பரவசத்தில் எழுதிய வெண்பாக்கள்....

...கிரேசி மோகன்....

No comments:

Post a Comment