நிசியைப்போல் ஒளிரும் மேனி
நிலவைப்போல் குளிரும் காந்தம்
அசையாத சுடரொன்றைப் போல்
அலுங்காத அழகு நெற்றி
ஒசிகின்ற வண்ணப் பீலி
ஒப்பனை யாய்ய சோதை
மசியிட்ட வயிரக் கண்கள்
மயங்கிவிட் டாயே தோழீ
மாயையின் மருட்சி போலே
சுருள்சுரு ளாகக் கேசம்
மையத்தில் வெய்யில் போலே
சந்தனத்தின் நிவாசம்
ஆயர்தம் அண்ணல் எங்கள்
ஆருயிர் அழகுக் கன்னல்
கன்னத்தின் குழியி லேநீ
கலங்கிவிட்டாயே தோழீ
ஆழ்கடல் தினவை யெல்லாம்
அடக்கிவைத் தாற்போல் தோள்கள்
பாய்விரி பசும்புல் மேலும்
பாம்பணை துயிலும் தோற்றம்
நேர்நிரை என்ற பொல்லா
இலக்கணம் எல்லாம் கண்ணன்
நேர்ப்பட்ட பின்னிங் கில்லை
நினைத்து விட்டாயே தோழீ
நிலவைப்போல் குளிரும் காந்தம்
அசையாத சுடரொன்றைப் போல்
அலுங்காத அழகு நெற்றி
ஒசிகின்ற வண்ணப் பீலி
ஒப்பனை யாய்ய சோதை
மசியிட்ட வயிரக் கண்கள்
மயங்கிவிட் டாயே தோழீ
மாயையின் மருட்சி போலே
சுருள்சுரு ளாகக் கேசம்
மையத்தில் வெய்யில் போலே
சந்தனத்தின் நிவாசம்
ஆயர்தம் அண்ணல் எங்கள்
ஆருயிர் அழகுக் கன்னல்
கன்னத்தின் குழியி லேநீ
கலங்கிவிட்டாயே தோழீ
ஆழ்கடல் தினவை யெல்லாம்
அடக்கிவைத் தாற்போல் தோள்கள்
பாய்விரி பசும்புல் மேலும்
பாம்பணை துயிலும் தோற்றம்
நேர்நிரை என்ற பொல்லா
இலக்கணம் எல்லாம் கண்ணன்
நேர்ப்பட்ட பின்னிங் கில்லை
நினைத்து விட்டாயே தோழீ
No comments:
Post a Comment