Friday, February 12, 2016

கன்னத்தின் குழியி லேநீ கலங்கிவிட்டாயே தோழீ - Shobana Ravi

நிசியைப்போல் ஒளிரும் மேனி
நிலவைப்போல் குளிரும் காந்தம் 
அசையாத  சுடரொன்றைப் போல் 
அலுங்காத அழகு நெற்றி 
ஒசிகின்ற  வண்ணப் பீலி 
ஒப்பனை யாய்ய சோதை 
மசியிட்ட வயிரக் கண்கள் 
மயங்கிவிட் டாயே தோழீ 

மாயையின் மருட்சி போலே 
சுருள்சுரு ளாகக் கேசம் 
மையத்தில் வெய்யில் போலே 
சந்தனத்தின் நிவாசம் 
ஆயர்தம்  அண்ணல் எங்கள் 
ஆருயிர் அழகுக் கன்னல் 
கன்னத்தின் குழியி லேநீ
கலங்கிவிட்டாயே தோழீ 

ஆழ்கடல் தினவை யெல்லாம் 
அடக்கிவைத் தாற்போல் தோள்கள் 
பாய்விரி பசும்புல் மேலும் 
பாம்பணை துயிலும் தோற்றம் 
நேர்நிரை என்ற பொல்லா 
இலக்கணம் எல்லாம் கண்ணன் 
நேர்ப்பட்ட  பின்னிங் கில்லை 
நினைத்து விட்டாயே தோழீ

No comments:

Post a Comment