Saturday, February 13, 2016

எக்காலம் - Sundaraa

ஓர்சுருதி லயம்வாய்த்த உயரடியார் கூட்டத்தில்
வேர்பிடித்து யானுமதாய் விளங்குவது மெக்காலம்?

தேரில் வடம்பிடித்து
தெய்வத்தைக் கூட்டிவந்து
நாரில் மலர்தொடுத்து
நான்மணப் தெக்காலம்?

அழுகை, வெகுளி, மன
ஆற்றாமை என்பதெல்லாம்
பழகும் பரமனுக்கே
படைப்பதுவு மெக்காலம்? 

எதுமேல் எதுமேலே
எனக்கேட்கும் குழுவுக்குள்
மதவேள் படைப்பழிப்பில்
மயங்குவது மெக்காலம்!

****





No comments:

Post a Comment