தென்னாடுடைய சிவனே போற்றி!
வார்தங்கும் சடைதங்கும் நீருடனே
வளர்மதியும் தங்கும் தங்கும்,
ஏர்தங்கும் கண்டத்தில் இன்னருளும்
நமக்கென்றும் தங்கும் தங்கும்!
கார்தங்கும் தேவியவள் காதலினால்
இடப்பாகம் தங்கும் தங்கும்!
தார்தங்கும் விதமாகத் தானாடும்
பாம்பென்றும் தங்கும் தங்கும்!
ஆர்தங்கும் அனல்தங்கும் அண்ணலவன்
அருளென்றும் தங்கும் தங்கும்!
கூர்தங்கும் திரிசூலம் கொண்டாடும்
நெஞ்சத்தில் தங்கும் தங்கும்!
மார்தங்கும் கொன்றைமலர் மணமெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்!
கார்தங்கும் கழலடியும் கவிநெஞ்சில்
களிப்புடேனே தங்கும் தங்கும்!
ஊர்தங்கும் உயிர்தங்கும் ஒளியாக
என்றென்றும் தங்கும் தங்கும்,

நீர்தங்கும் நிலமெங்கும் நிர்மலனின்
எழிலென்றும் தங்கும் தங்கும்!
தேர்தங்கும் சிவனாரைத் தரிசிக்கத்
தெய்வங்கள் தங்கும் தங்கும்!
நார்தங்கும் மலர்போல நம்நாவில்
திருநாமம் தங்கும் தங்கும்!
பார்தங்கும் பாவென்றும் போதெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்,
சீர்தங்கும் சிவனாரைச் செப்புகின்ற
பாவென்றும் தங்கும் தங்கும்!
நேர்தங்கும் நிரைதங்கும் நிகரில்லாச்
செந்தமிழும் தங்கும் தங்கும்!
பேர்தங்கும் புகழ்தங்கும் பெம்மானின்
திருவருளால் தங்கும் தங்கும்.
சிவசூரி.
வார்தங்கும் சடைதங்கும் நீருடனே
வளர்மதியும் தங்கும் தங்கும்,
ஏர்தங்கும் கண்டத்தில் இன்னருளும்
நமக்கென்றும் தங்கும் தங்கும்!
கார்தங்கும் தேவியவள் காதலினால்
இடப்பாகம் தங்கும் தங்கும்!
தார்தங்கும் விதமாகத் தானாடும்
பாம்பென்றும் தங்கும் தங்கும்!
ஆர்தங்கும் அனல்தங்கும் அண்ணலவன்
அருளென்றும் தங்கும் தங்கும்!
கூர்தங்கும் திரிசூலம் கொண்டாடும்
நெஞ்சத்தில் தங்கும் தங்கும்!
மார்தங்கும் கொன்றைமலர் மணமெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்!
கார்தங்கும் கழலடியும் கவிநெஞ்சில்
களிப்புடேனே தங்கும் தங்கும்!
ஊர்தங்கும் உயிர்தங்கும் ஒளியாக
என்றென்றும் தங்கும் தங்கும்,

நீர்தங்கும் நிலமெங்கும் நிர்மலனின்
எழிலென்றும் தங்கும் தங்கும்!
தேர்தங்கும் சிவனாரைத் தரிசிக்கத்
தெய்வங்கள் தங்கும் தங்கும்!
நார்தங்கும் மலர்போல நம்நாவில்
திருநாமம் தங்கும் தங்கும்!
பார்தங்கும் பாவென்றும் போதெல்லாம்
நம்நெஞ்சில் தங்கும் தங்கும்,
சீர்தங்கும் சிவனாரைச் செப்புகின்ற
பாவென்றும் தங்கும் தங்கும்!
நேர்தங்கும் நிரைதங்கும் நிகரில்லாச்
செந்தமிழும் தங்கும் தங்கும்!
பேர்தங்கும் புகழ்தங்கும் பெம்மானின்
திருவருளால் தங்கும் தங்கும்.
சிவசூரி.
No comments:
Post a Comment