Tuesday, March 8, 2016

அவன் சிவன் - K Ravi

சொக்கன் என்றாலும் சுடலை என்றாலும்
தக்கனைக் கொன்ற ருத்ரன் என்றாலும்
முக்கண் என்றாலும் மூர்க்கன் என்றாலும்
அக்கணமே வரும் ஆண்டவன் அவனே

ஆட்டம் என்றாலும் அடியவர் திரளும்
கூட்டம் என்றாலும் கூத்தென்றாலும்
பாட்டெடுத்தாலும் பிச்சை எடுத்தாலும்
நாட்டமுடன் வரும் நாயகன் அவனே

வெண்ணீ றணிந்தாலும் விழிகள் கலுழ்ந்து
கண்ணீர் பொழிந்தாலும் கவியிசைத்தாலும்
உண்மை உரைத்தாலும் பொய்யென்றாலும்
அண்மை நிழலாகும் அண்ணலும் அவனே

No comments:

Post a Comment