பார்வைகள் ஜ்வாலைகளாகும்
உன்பார்வைக்கு வேள்பட்ட பாடொன்றே போதும்!
நான்காண நீதோன்றும் காலம்! - இந்த நானொன்றை மட்டும் நீ எரியூட்ட வேண்டும் (சம்போ மகாதேவ தேவ)
அரவங்கள் அணியென்று ஆடும்! உன் ஆலத்தில் துளியேனும் கடன்கேட்கும் போலும்! இதயத்தில் நீ தோன்றும் காலம்! என்
இடமுள்ள விடம்கூட நின்கண்டம் மேவும்! (சம்போ மகாதேவ தேவ)
திரிசூலம் பகையாவும் தீர்க்கும்! உன் திறமான கரம்சேர்ந்து உறவாடி வாழும்! பரிவோடு எனைப்பார்க்கும் காலம்! உன் பரிவாரம் தனிலென்னை ஒன்றாக்க வேண்டும்! (சம்போ மகாதேவ)
இடபாகம் அன்னைக்கென்றாகும்! உன் இதயமும் அதனாலே அவளே என்றாகும்! உடனேகி அவளோடு தோன்றும் அந்த ஒருகணத்தோடினிப் பிறவாமை வேண்டும்! (சம்போ மகாதேவ தேவ)
உன்பார்வைக்கு வேள்பட்ட பாடொன்றே போதும்!
நான்காண நீதோன்றும் காலம்! - இந்த நானொன்றை மட்டும் நீ எரியூட்ட வேண்டும் (சம்போ மகாதேவ தேவ)
அரவங்கள் அணியென்று ஆடும்! உன் ஆலத்தில் துளியேனும் கடன்கேட்கும் போலும்! இதயத்தில் நீ தோன்றும் காலம்! என்
இடமுள்ள விடம்கூட நின்கண்டம் மேவும்! (சம்போ மகாதேவ தேவ)
திரிசூலம் பகையாவும் தீர்க்கும்! உன் திறமான கரம்சேர்ந்து உறவாடி வாழும்! பரிவோடு எனைப்பார்க்கும் காலம்! உன் பரிவாரம் தனிலென்னை ஒன்றாக்க வேண்டும்! (சம்போ மகாதேவ)
இடபாகம் அன்னைக்கென்றாகும்! உன் இதயமும் அதனாலே அவளே என்றாகும்! உடனேகி அவளோடு தோன்றும் அந்த ஒருகணத்தோடினிப் பிறவாமை வேண்டும்! (சம்போ மகாதேவ தேவ)
No comments:
Post a Comment