Tuesday, March 8, 2016

இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு... - K Ravi

(இது வாவர் சாமியே வந்து பாடுற பாட்டு.)

கல்லு முள்ளு காடு மலை கடந்து வந்தேன் - காரணம்
விட்ட குறை தொட்ட குறைதான்
வில்லும் அம்பும் ஏந்திப் புலி
மேலவராறே - என்
சின்னதுரை சின்னதுரை தான்
சின்னதுரை சின்னதுரை தான்
      தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

பூவுக்கு மத்தியிலே மூணாம் பிறை
போலச் சிரிப்பாரே என் சின்னதுரை
பம்பைநதி யோரமவர்
ராஜநடை- அதைப்
பாத்துரசிச் சிருந்ததெலாம்
பழையகதை
       தோழன்னா தோழனிந்த
       வாவருதான் - என்
       தோள் மேலே சின்னதுரை
       தேவரு தான்

எந்த ஜன்மம் எந்த யுகம்
நெனவிலில்லே - நான்
என்னதவம் செஞ்சேனோ
வெளங்கவில்லே
பந்தளத்து சிங்கக்குட்டி
பக்கத்துல வேஷங்கட்டிச்
சேவகனா நிக்கஎடம்
புடிச்சுக்கிட்டேன்
தெய்வத்துக்கே காவலனா
நடிச்சுப்பட்டேன்
       காவலுன்னா காவலிந்த
       வாவருதான் - ஒரு
       காத்துக்கருப் பண்டாமப்
        பாத்துக்குவான்

காட்டெருமை வேட்டைக்கென்னைக்
கூட்டிக்கிட்டுப் போனபுள்ளே
கோட்டை கட்டித் தந்தாரே
காட்டுக்குள்ளே - என்னைக்
காத்திருன்னு சொல்லிப் புட்டு
மேட்டிலேறிக் குந்திக்கிட்டு
வாவருன்னு கூப்பிடுதே
இந்தப் புள்ளே
அல்லாஹு அக்பர் நானோர்
அடிமை யப்பா
எல்லாரும் அவருக்குள்ளே
சரணம் அப்பா

No comments:

Post a Comment