Tuesday, March 8, 2016

சிவமே லயமே

லயமே சிவமே தயங்காத காருண்யமே
மயனால் பிறந்த திரிபுரங்களை வெல்ல
பாணம் தந்த சிலையே
காலம் வென்ற நிலையே --லயமே

பனியில் பூத்த தழலே -வெண்ணீறு
கணவு காணும் நிழலே
மதியும் அரவமும் நதியும் உலவிடும்
கானகக் குழலே
முகில் உலாவும் நுதலே --லயமே

தீம் தோம் தீம் தோம்
தீம் திரன தன தீம் தோம்

தவம் கலைந்ததும் தாண்டவம்
புயல் நிமிர்ந்ததைப் போல் நர்த்தனம்
இமை விரிந்து சடை பிரிந்து
இசை சிலிர்த்துத் தாளம் தெறிக்க
வந்தோம் என துந்துபி பாடி வரும்
தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம் -வந்தோம் .....
           --லயமே .....

No comments:

Post a Comment